தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் தொடர்பு நிலையம்: அன்னை கலைக் கழகம்- நடராசா கண்ணப்பு, லண்டன்

Monday, 27 February 2012

குறு அரங்கங்கள்


குறு அரங்கங்கள்
கவிப்பேராசான் கண்ணப்பு எழுதும் அரங்க அனுபவங்கள்.

2-5 நிமிடம்‌கால அளவில் அடங்கும் மிக தாக்கமான செய்தியை உணர்வோடு சொல்லும் அரங்கங்கள்:
கல்வி செல்வம் வீரம் -2007
சரஸ்வதி பூசையில் அரங்கேறியது, இந்த நாடகத்தில் மூவரை மட்டும் மூன்று பண்புகளைப் பிரதிபலிக்க பாவித்தேன்:
1.செல்வம்: மயிலாய் முத்திரை பிடித்து ஆடி வருதல் மெலிதான சிறு பெண் வருதல்.
2.கல்வி: யானையைபோல் கொஞ்சம் வளர்ந்த சிறுவன் அசைந்து ஒரு கையை மடக்கி மறு கையை நீட்டி யானையாய் குறியீடு இட்டு வருதல் பிளிறல்,
3. வீரம்: சிங்கம் போல் இன்னொரு சிறுவன் உறுமுதல் கையால் சிங்கம் போல் பாவனை செய்து சீறி வருதல்.

குறிப்பு: இந்த அரங்கை மிகக் குறுகிய நேரத்தைல் தயாரித்தேன். பல காலம் பழக்கி அரங்கை நிறைவேற்ற எவ்வளோவோ கஷ்டப்பட்டுள்ளேன் , அரங்கேறுவதற்குள் எத்தனை இடர்பாடுகள், முடிவில் சில அனுபவங்கள் மிகக் கசப்பானவை.

ஆனால் இந்த நாடகத்தில் அரை மணித்தியாலத்திற்குள் பழக்கி, அடைந்த வெற்றி மிகப் பிரமிப்பானது.

பங்குபற்றிய யாவரும் லண்டனில் பிறந்து வளர்ந்த சிறுவர்கள் ஆயினும் அவர்களின் இந்த அரங்கில் காட்டிய ஈடுபாடும் அரங்க முடிவில் அடைந்த மகிழ்ச்சியும் எனக்கு மிகப் பெரிய வெற்றியாகும்.

அரங்கில் பங்காளர்களாகியாகிய நடிகர்கள் பாராட்டப்படும்போது தான் எவ்வளவு பெறுமதியான அரங்கை அதன் இயக்குனர் நிறைவேற்றியுள்ளார் என்பதை உணரமுடிக்கின்றது.

Friday, 24 February 2012

தனி நடிப்பு அரங்குகள் :  

2014
குமுழிகளும் குருவிகளும் 


2013

                                                                       அக்னி-2



'84-2012 வரை

புலம்பெயர்ந்த பின்னர்:

அக்னி

======================================
லைலா மஜ்ணு





====================================================
ராவணன்
இந்த அரங்கானது நெடெர்லாந்தில் தனிபர் அரங்காய் நிகழ்ந்தது, ராவணனை எங்கள் தமிழ் மூதாதையனாய் சித்தரித்து, அவன் சிறந்த சிவா பக்தனாய்க் காட்டி, சீதையின்  தகப்பனாய், தவிர்க்க முடியாக்காரணத்தினால் புத்திரி சீதையைக் கடலில் எறிய அக்குழந்தை மிதிலையை ஆடவதாய், புத்திரி சோகத்தால் ராவணன் எப்படிப் பழிவாங்கும் ராமன்எதிரி ஆனான் என்றவகையில் இவ்வரங்கு இடம்பெற்றது, 


==============================================
சேட்னா


 
================================================
8001 இல் வியாழனனிலுருந்து கண்ணப்பு  



 
=====================================
பரதன் 

நான் முன்னர் அகில இலங்கை நாடகப் பேரவையில் அங்கம் வகித்த போது, ராமாயணத்தை சுருக்கி எழுதினேன்.
அதில் வரும் பரதனுக்குரிய எனது வசனங்கள் எனக்கு மிகவும் பிடித்தது, மேலும் அக்கதாபாத்திரமும் என்னைக் கவர்ந்தது, ராமன் காடேகிய பின்னர்  தாயைதிட்டுவது போல் வரும் கோபமும் சோகமும் கலந்த இந்த உணர்ச்சிக் கலவை எனக்கு மிகப் பிடித்தமான காட்சி, அதன் காரணத்தினால்  வாய்ப்புக்  கிடைக்கும் போதெல்லாம் இந்த காட்சியை நடித்துக் காட்டுவேன்.
=======================================
குறிப்பு: 
இந்த அரங்குகளிலெல்லாம் தனி ஒருவராக  மேடையில் ஒரு அரங்கை நிகழ்த்தினேன்.
இவற்றிலெல்லாம் எழுதி இயக்கி நடித்திருந்தேன். 

இந்த அரங்க அனுபவங்களை அவற்றின் அரங்க நெறி முறைகள் பற்றி விளக்கமாய் எழுதவுள்ளேன்.

அரங்க ஆற்றுகை.
நடராசா கண்ணப்பு
==============================================